இளம்பெண் கொடுத்த.. அசத்தல் திருமண நாள் பரிசு - திகைத்து போன முதலமைச்சர் ஸ்டாலின்

x

இளம்பெண் கொடுத்த.. அசத்தல் திருமண நாள் பரிசு - திகைத்து போன முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமண நாள் பரிசாக நூல் ஜரிகையால் செய்யப்பட்ட ஆளுயுர போட்டோ பிரேமை சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வழங்கினார். கொடுங்கையூரை சேர்ந்த கவிதா என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு இவரை கவர்ந்ததால், அவருக்கு திருமண நாள் பரிசு வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதற்காக சாதாரண ஊசி உதவியுடன் செய்யும் ஆரி ஓர்க் மூலமாக நூல் ஜரிகையால் போட்டோ பிரேம் உருவாக்கி, இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்