"உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்" - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி

x

தமிழக அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தனது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு, மதுரை வளையங்குளத்தில் நடைபெற்றது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்