"உங்க இஷ்டத்துக்குலாம் ஆட முடியாது" - திமுக MLA-வை விளாசிய டிஎஸ்பி - தீயாய் பரவும் ஆடியோ

x

பட்டுக்கோட்டை நீர்நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் அள்ளிய ஆளும் கட்சியினரின் வாகனங்களை

வாகனங்களை விடுவிக்க கோரி, திமுக மாவட்ட செயலாளர் டிஎஸ்பியிடம் பேசிய ஆடியோ, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, 20 அடிக்கு மேல் மண் அள்ளப்பட்டதால், பட்டுக்கோட்டை போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதையறிந்த பட்டுக்கோட்டை எம்எல்ஏவும், திமுகவின் மாவட்ட செயலாளருமானஅண்ணாதுரை, தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் அதற்கு தாசில்தார் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் வாகனங்களின் சாவியை தராததால், டிஎஸ்பியிடம் அண்ணாத்துரை போனில் பேசியுள்ளார். அப்போது வழக்கு பதியாமல் வாகனங்களை தர முடியாது என்று டிஎஸ்பி கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்