மாணவியை தவறான வழிக்கு அழைத்த சென்னையின் பிரபல தனியார் கல்லூரி டீன்.. வைரலாகும் ஆபாச ஆடியோ

x

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம் மீது, கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி, அந்தக் கல்லூரியில் படிக்கும் 23 வயது மாணவி ஒருவர், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், இந்தக் கல்லூரியின் முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர், வகுப்பில் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவியின் புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டிற்கு கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கல்லூரி முதல்வர் செல்போனில் மாணவியிடம் ஆபாசமாக பேசி, தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்