நேற்று காலை முதல் இன்று வரை... ஏரிகளில் வேகமெடுக்கும் தண்ணீர்

x

வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

நேற்று முன் தினத்தை தொடர்ந்து இன்றும் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , இரவு முதல் விடிய விடிய செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகின்றது,,

செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியான பாலூர், தேவனூர், குருவன்மேடு ஆகிய பகுதியிலும் கன மழை பெய்து வருகின்றது.

இதே போல் பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்க்கின்றது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்