கனமழையால் மஞ்சள் அலெர்ட்....! வருகிறது மீன்பிடித் தடைக்காலம்...

x

கேரளாவில் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் வரும் 12ம் தேதி பரவலாக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளிலும் சிறப்பு கவனம் தேவை என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீன்பிடி தடைக்காலம் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க‌க் கடல் பகுதியில், 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்