வாயை விட்ட எடியூரப்பா... உச்சக்கட்ட டென்ஷனில் பாஜகவினர்

x
  • கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், தமது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார் என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளிப்படையாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சி.டி ரவி, தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது, எடியூரப்பா வீட்டு சமையலறையில் முடிவாகாது என்றும், கட்சித் தலைமையே முடிவு செய்யும் என கருத்து தெரிவித்திருந்தார்.
  • இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியுரப்பா, தனது மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் தான் போட்டியிடுவார் என, எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
  • இன்னும் நான்கு ஐந்து நாட்களில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் ஷிகாரி புராவில், எடியூரப்பா மகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன், எடியூரப்பா உறுதி பட தமது மகன் போட்டியிடும் தொகுதி பற்றி கூறியுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்