மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கேட்ட எடியூரப்பா..."இது சமயலறையில் எடுக்கப்படும் முடிவல்ல" | CT Ravi

x

கர்நாடகாவில் பாஜகவின் முகமாக அறியப்படுபவர் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, தான் நேரடி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். முன்னதாக தனது தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியை தனது இளைய மகனான விஜேந்திராவுக்கு விட்டு கொடுக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு

தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பாஜக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிரானது பாஜக என்பதை சுட்டிக்காட்டிய

சி.டி.ரவி, வேட்பாளர் தேர்வு ஒன்றும் எடியூரப்பா வீட்டின் சமயலறையில் எடுக்கப்படும் முடிவல்ல, அதற்கென்று நாடாளுமன்ற குழு இருக்கிறது என தடாலடியாக தனது அதிருப்தியை போட்டு உடைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்