டெல்லியை அலறவிடும் யமுனை..! - "இனி தான் பிரச்சனையே ஆரம்பம்.." - கெஜ்ரிவால்

x

மூடப்பட்ட வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் முதல்முறையாக யமுனை நதி நீர்மட்டம் இந்த அளவை தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், பம்புகள் மற்றும் இயந்திரங்களில் தண்ணீர் புகுந்ததால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் டெல்லிக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு 25 சதவீதம் குறையும் என்றும், ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் எனவும், நாளை மாலைக்குள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் துவங்கப்படும் என நம்புவதாகவும் கூறினார். இன்று பிற்பகல் யமுனை நதி நீர்மட்டம் உச்ச கட்டத்தை அடைந்து பின்னர் அது குறையத் துவங்கும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்