ஐஸ்வர்யா ராய் மகளின் உடல்நலம் குறித்து தவறான வீடியோ...அபிஷேக் பச்சன் எடுத்த முடிவு.. டெல்லி ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் உடல்நலம் குறித்த தவறான வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கும்படி, கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

பிரபல பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயின் தம்பதிக்கு 11 வயதில் ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். இவரது உடல்நலம் குறித்து சிலர் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். அந்த வீடியோவில் ஆராத்யா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக் பச்சன், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஒவ்வொரு குழந்தையும் மாண்புடனும், மரியாதை உடனும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதி, ஆராத்யா தொடர்பான தவறான வீடியோக்களை நீக்கும்படி அறிவுறுத்தினார். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த தவறான தகவல் பரவுவதை ஏற்க முடியாது என்ற அவர், கூகுள் விரிவான பதிலை தாக்கல் செய்யவும்https://youtu.be/Xv-UfTg7AkU


Next Story

மேலும் செய்திகள்