தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு

x

தவறான சிகிச்சையால், பிரசவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு, 12 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரில் மகப்பேறும் மருத்துவமனையில் கடந்த 2018ம், ஆண்டு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, எழில் செல்வி என்பவர் பிரசவத்திற்கு பின் உயிரிழந்தார்.

இந்நிலையில், பெற்றோர் அளித்த புகார் மீதான விசாரணையில், மருத்துவரின் அஜாக்கிரதையால் இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்