பொதுத்தேர்வில் தோல்வி பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு -அதிர்ந்து போன பெற்றோர்கள்..!

x

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் இருந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டீ. கல்லுப்பட்டி என் ஜி ஓ நகரை சேர்ந்த கணேசன் - கருப்பாயி தம்பதியின் இளையமகள் அன்னலட்சுமி, அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். அண்மையில் எழுதி முடித்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற மனு உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்