ஈபிஎஸ் தாக்கல் செய்த ரிட் மனு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

x

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு அங்கீகாரம் அளிக்க உத்தரவிடக்கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் தேர்தல், ஓபிஎஸ் நீக்கம் உள்ளிட்ட புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடேயே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக களமிறங்க உள்ளதால், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா.எம். சிங் இன்று விசாரிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்