கைது செய்யப்பட்டபோது மல்யுத்த வீரர்கள் சிரித்தனரா...?பரபரப்பை கிளப்பிய போட்டோக்கள் - மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விளக்கம்

x

கைது செய்யப்பட்டபோது மல்யுத்த வீரர்கள் சிரித்துக்கொண்டு இருப்பது போல வெளியான புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறி உள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அப்போது பேருந்தில் ஏற்றப்பட்ட, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போஹத், சங்கீதா போஹத் ஆகியோர் சிரித்துக்கொண்டு செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், புகைப்படம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பஜ்ரங் புனியா, இந்த புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டவை என்றும், ஐ.டி. செல்தான் இவற்றை பரப்பி வருவதாகவும் கூறி உள்ளார். இவற்றைப் பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்