"ரேஷன் அரிசியில் கிடந்த... " - ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்

x

சீர்காழியில் ரேஷன் கடை அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் அதிர்ச்சியடைந்த பயனாளி, அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீர்காழியில் பிடாரி வடக்கு வீதியில் உள்ள ரேஷன் கடையில், அரிசி வாங்கிய பயனாளி ஒருவர், அரிசி முழுவதும் புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ரேஷன் கடை நிர்வாகியிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த பயனாளி, அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார். மேலும் ரேஷன் கடை நிர்வாகியிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்