பிரியாணி சாப்பிடும் போது சிக்கனில் நெளிந்த புழுக்கள்! - பிரபல உணவகத்தில் அதிர்ச்சி

x

கேரளாவில், உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சிக்கனில் புழுக்கள் இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம், புத்தனத்தாணி பகுதியில் உள்ள உணவகத்திற்கு சரபுதீன் என்பவர் தன் குடும்பத்தினருடன் உணவருந்த சென்றிருந்தார். அப்போது, உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் இருந்த சிக்கனில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உணவு பொருள்களை பரிசோதித்தனர். மேலும், உணவக உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்


Next Story

மேலும் செய்திகள்