கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழு - சமைத்து முடித்து சாப்பிட சென்ற போது பயங்கரம் -தேனியில் பரபரப்பு

x

தேனியில் இறைச்சி கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிஸ்வரன்.

இவர் அருகில் உள்ள மார்க்கெட்டில் வாங்கிய கோழிக்கறியை ஃப்ரிட்ஜில் வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மறுநாள் காலை இறைச்சியை எடுத்து சமைக்க சென்ற ஆதிஸ்வரனின் மனைவி கறியில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே, காலையில் குழந்தைக்கு கொடுத்தனுப்பிய உணவை பள்ளிக்கு சென்று திரும்ப பெற்ற நிலையில், கடைக்காரரிடம் சென்று வாக்குவதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்