மின் இணைப்பை துண்டித்த ஊழியர் - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய இளைஞர்

x

புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் மீது, காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது வீட்டில் மின் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த 20ம் தேதி, புளியந்தோப்பு துணை மின்வாரியத்தில் பணிபுரியும் ரகுபதி என்பவர், அவரது வீட்டில் மின் இணைப்பை துண்டிக்க சென்றார். இதில் ஆத்திரமடைந்த நாராயணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால், ரகுபதியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த நாராயணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்