பணி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் - புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

x

பணி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் - புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் விவகாரம் தொடர்பாக மின்துறை அனைத்து ஊழியர் சங்கத்தினர் மற்றும் அமைச்சர், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வருகின்ற மழைக்காலத்தில் மின்தடையின்றி அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து மக்களுக்கு மின்சாரம் வழங்குவார்கள் என்று மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி முடிந்த பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம் என கேட்டு கொண்டதற்கினங்க ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்