ஏர்போர்ட்டில் வேலை...! "என்ன கொஞ்சம் செலவாகும்..." லட்சம் லட்சமாய் வாங்கி மோசடி செய்த கும்பல்...

x

தேனியை சேர்ந்த பெண் ஒருவர், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மர்ம கும்பல் 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேனி சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெல்லிக்கு விரைந்த தனிப்படை போலீசார், 5 பேரை கைது செய்து அழைத்து வந்தனர்.

மோசடி செய்யப்பட்ட தொகை இன்னும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியான மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்