மார்ச்-யில் மகளிர் ஐ.பி.எல். ஏலம் - 12 கோடிக்கு வீராங்கனைகள் ஏலம்

x

முதலாவது மகளிர் ஐபிஎல் டி20 தொடரை, வரும் மார்ச் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் மும்பை, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கனைகளின் ஏலம், வரும் 13-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அணிகளின் உரிமையாளர்களுக்கு வீராங்கனைகளின் பட்டியல் அளிக்கப்பட்டு விட்டதாகவும், ஒவ்வொரு அணியும் 12 கோடி ரூபாய்க்கு வீராங்கனைகளை ஏலத்தில் வாங்கலாம் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்