சட்டென வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து... உள்ளிருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட பெண் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

நாமக்கல் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற 20 வயது இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப தனியார் பேருந்தின் முன்புற படிக்கட்டு அருகே நின்று வந்துள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி சாலை வளைவில் பேருந்து அதிவேகமாகத் திரும்பியது. கவுசல்யா நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே சாலையோரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து பதிவான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்