"தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்தனர்" - பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் புகார்

x

தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்ததாக, பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்புட்குழி ஊராட்சி மன்ற தலைவரான பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுகுணா தேவேந்திரன், அங்குள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு கொடியேற்றச் சென்றபோது, பாலச்சந்தர், செல்வம் ஆகியோர் கொடியேற்ற விடாமல் தடுத்து, தரக்குறைவாக பேசியுள்ளனர்.

ஏற்கெனவே தரக்குறைவாக பேசியதால், அவர்கள் மீது சுகுணா தேவேந்திரன், புகார் கொடுத்திருந்தார்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், கைது செய்யப்படாத நிலையில், மீண்டும் அவர்கள் மீது சுகுணா புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்