போலி நகையை அடகு வைத்த பெண்... செக் செய்த ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பின்னாலே சென்று துரத்தி பிடித்த பரபரப்பு காட்சிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், போலி நகையை அடகு வைத்து 65 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு தப்பியோடிய பெண்ணை, நகைக்கடை உரிமையாளர் துரத்திச் சென்று பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருத்தணி கமலா திரையரங்கம் அருகே அசோக்குமார் என்பவர் அடகு கடைக்கு வந்த பெண், 19 கிராம் சங்கிலியை அடகுவைத்து, 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு தப்பியோடினார். கடை உரிமையாளர் நகையை பரிசோதனை செய்தபோது, அது போலி என தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண்ணை துரத்திச் சென்ற கடை உரிமையாளர், அவரை விரட்டிப் பிடித்து பணத்தை கைப்பற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்