"பொம்பளைங்களுக்கு மட்டும் ஃப்ரீ.. நான் டிக்கெட் எடுக்கணுமா" - பெங்களூரு கண்டக்டரை அறைந்த வெளிமாநிலத்தவர்

x

பெங்களூருவில், பெண்களுக்கான சக்தி இலவச பேருந்து திட்டம் குறித்த அறியாத வெளிமாநில இளைஞர், டிக்கெட் எடுக்க மறுத்து பேருந்து நடத்துனருடன் கைகலப்பில் ஈடுபட்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ராமையா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய வெளிமாநில இளைஞர் ஒருவர், பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணிப்பதை கண்டு தானும் டிக்கெட் எடுக்கமாட்டேன் என நடத்துனரிடம் கூறியுள்ளார். அவரிடம் சக்தி திட்டம் குறித்து நடத்துனர் எடுத்துக்கூறிய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்