90 சதவீத தீக்காயத்துடன் பெண் மீட்பு - தற்கொலையா? அல்லது கொலை முயற்சியா? - போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே, திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம்பெண், உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டதில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ள கேட் தாமரை தாங்கள் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். கடந்த ஒரு மாதமாக கணவரை பிரிந்து, தனது தாய் வீட்டில் பிரியதர்ஷிணி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியதர்ஷினி, பென்னலூர் பேருந்து நிறுத்தம் பின்புறம், 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரியதர்ஷினி தானாக உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு யாரேனும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்