ஆளுநர் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர் சாலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஆளுநரின் பாதுகாப்புக்காக கோவை மாவட்டம் அன்னூர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பெண் காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x

உதகையிலிருந்து அன்னூர் வழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை வந்தார். ஆளுநரின் பாதுகாப்புக்காக நெகமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் முத்து கல்யாணி அன்னூர் ஜே ஜே நகர் பகுதியில் சாலையில் நின்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்