கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - கொலையா..? தற்கொலையா..?

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அடுத்த தகரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா காந்தி. இவருக்கு திருமணமாகிய நிலையில் சிறுது மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இந்திரகாந்தியை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திரகாந்தியை போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்