கருத்தடை சாதனம் அகற்ற வந்த பெண்ணுக்கு சீரியஸ் - ரமணா பட பாணியில் மருத்துவர்கள் கொடுத்த ஆக்டிங்.. - மதுராந்தகத்தில் பயங்கரம்

கருத்தடை சாதனம் அகற்ற வந்த பெண்ணுக்கு சீரியஸ் - ரமணா பட பாணியில் மருத்துவர்கள் கொடுத்த ஆக்டிங்.. - மதுராந்தகத்தில் பயங்கரம்
Published on

மதுராந்தகம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை சாதனம் அகற்ற வந்த பெண் உயிரிழந்த‌தால், மருத்தவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

சிலாவட்டம் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கு கருத்தடை சாதனம் அகற்றுவதற்காக சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ரமணா பட பாணியில் மருத்துவர்கள் சீரியசாக காட்டியதாக திவ்யாவின் கணவர் ஜானகிராமன் குற்றம் சாட்டியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com