பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றமா?

பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றமா?
x

திட்டமிட்டபடி நாளை பள்ளிக்கூடங்கள் தொடங்க உள்ள நிலையில், செயல்படும் நேரத்தை அந்த‌ந்த‌ பள்ளிகளே முடிவு செய்யலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த‌தை அடுத்து நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில், மீண்டும் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்வி பெற்றோரிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி அனைத்து பள்ளிக்கூடங்களும் நாளை திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. காலை 9.10 மணி முதல், மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படுவதற்கான மாதிரி நேரத்தை வெளியிட்டுள்ளதோடு, 8 பாடவேளை கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே, மேலாண்மைக் குழுக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்