திறக்கப்படுமா பெருங்களத்தூர் மேம்பாலம்?... "3 கி.மீ. சுற்றிச் செல்லும் அவதி.." - வாகன ஓட்டிகள்

x

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில், 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்டலூரில் இருந்து தாம்பரம் செல்லும் ஒரு வழி பாதை கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட நிலையில், தாம்பரத்தில் இருந்து வண்டலூர் செல்லும் பாதையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் சீனிவாசன் நகர் பகுதிக்கு பாலம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இருந்தும், பாலத்தை திறக்காமல் தடுப்புகள் அமைத்து மூடி வைத்துள்ளதால், ரயில்வே கேட் மூடப்படும்போது 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்