எதிர்க்கட்சிகள் கூட்டம் புறக்கணிப்பா..? சரத் பவார் விளக்கம் | Bangalore | Sharad Pawar

x

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை இன்று ஒரு நாள் மட்டும் தவிர்த்துவிட்டு, நாளை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில், இக்கூட்டத்தில் முதலில் சரத்பவார் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், சரத்பவார் இன்று ஒருநாள் மட்டும் கூட்டத்தை தவிர்த்துவிட்டு, நாளை கலந்துகொள்வார் என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் பரேத் தபசே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்