சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை கிடைக்குமா?

x

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இது அரசின் வருவாய் தொடர்புடைய கொள்கை சார்ந்த விவகாரம் என தெரிவித்தது. எனவே, மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை வழங்குவதை முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான் என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்