ராகுலுக்கு மீண்டும் பதவி கிடைக்குமா? குஜராத் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

x

மோடி குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து, ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.கடந்த 2019-ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசினார். இதை எதிர்த்து பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து, சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஆர்பி மொகேரா, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்