டெல்லியில் மீண்டும் பெய்ய போகும் கன மழை அதிர்ச்சியில் டெல்லி வாசிகள் தப்பிக்குமா தலைநகர்...

x

யமுனை நதியில் நீர்வரத்து குறைந்தாலும், டெல்லியில் இன்னும் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்தது. ஹரியானாவில் தடுப்பணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்குப்பின் யமுனையில் நீர்வரத்து குறைந்து, இன்று காலை நீர்மட்டம் 205.95 மீட்டராக உள்ளது. நேற்று மாலை டெல்லியில் மீண்டும் மழை பெய்த நிலையில், இன்றும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. யமுனையில் நீர்வரத்து குறைந்தாலும், நகரின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. ஹரியானா பா.ஜ.க. அரசு, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிகப்படியான நீரை டெல்லிக்கு மட்டும் திறந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்