திடீரென புகுந்த காட்டு யானைகள்.. வெடி வெடித்து தப்பட்டை அடித்து விரட்டியடித்த காட்சி

x

கிருஷ்ணகிரி அருகே வாழை மரங்களை மிதித்து நாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக சின்ன சோக்காடி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும், தப்பட்டை ஒளி எழுப்பியும் 3 காட்டு யானைகளையும் மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்