கடைசியா டீத்தூளையும் விட்டு வைக்காத படையப்பா..இனி கொஞ்சநாள் டீ குடிக்க முடியாது போல..

x

கேரள மாநிலம் மூணாறில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்த டீ தூளை படையப்பா என்ற காட்டு யானை சேதப்படுத்தியது. கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட் பகுதியில் இயங்கி வரும், செண்டுவாரை தேயிலை தொழிற்சாலையில் இருந்து கொச்சிக்கு டீ தூள் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, லாரி டிரைவர் தனது வீட்டின் அருகே லாரியை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த படையப்பா என்ற காட்டு யானை, 15 மூட்டைகளில் இருந்த டீ தூளை சேதப்படுத்தி விட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்