காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழப்பு..தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கும் இரண்டு யானைகள்

x

ஆந்திராவின் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை, டி.சாடமூர் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே இரண்டு யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 உயிர்களைக் காவு வாங்கிய அந்த இரு யானைகளின் நடமாட்டம் குறித்து, ஆந்திர வனத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த இரு யானைகளால் மேலும் உயிரிழப்பு நிகழாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஆந்திர வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்