காட்டுப்பன்றிக்கு வெச்ச டிராப்பில் சிக்கி துடி துடித்து போன மனைவி உயிர்.... கணவன் எடுத்த முடிவு.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் தனது வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை மேகநாதன் தனது மனைவி துளசியுடன் வயலுக்கு சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் மன வேதனை அடைந்த மேகநாதன், அதே பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நேரத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடல்களை கைற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com