காதலனோடு தனியாக இருந்த மனைவி.. திடிரென வந்த கணவன் கத்தியால் வெட்ட - மனைவிக்கு கைவிரல்.. காதலனுக்கு..

x

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், விஜயலட்சுமி என்ற பெண்ணனுடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்தநிலையில், சுரேஷ்குமாரின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், அவரை கத்தியால் தலை, கழுத்து, தோல் பகுதி, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். தடுக்க வந்த விஜயலட்சுமியின் மீது, கைவிரல் துண்டாகிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், விஜயலட்சுமியின் முதல் கணவரான நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா, அடியாட்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.இதனிடையே, தலைமறைவாக இருக்கும் விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்