கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டித்த மனைவி விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு

x

ஓசூர் அருகே, வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததை மனைவி கண்டித்ததால், விரக்தியில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பேலாளம் கிராமத்தை சேர்ந்த அனுமந்தன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அனுமந்தனின் மனைவி நாகம்மாவுக்கு தெரியவர, குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த அனுமந்தன், மனைவி நாகம்மாவுக்கு வீடியோ கால் செய்து, தனக்கு வாழ பிடிக்கவில்லை எனக்கூறி, மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்