உல்லாசம் அனுபவிக்க இடையூறு! "குழம்பில் விஷம்... உடம்பில் மின்சாரம்" - கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரியாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு கீர்த்தனா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரேசன் என்பவருடன் மோகன்ராஜின் மனைவி கீர்த்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இது மோகன்ராஜூக்கு தெரியவந்துள்ளது... இதனால், ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்த நிலையில், அவருடன் தகாத உறவில் இருந்த கதிரேசனையும் அழைத்து எச்சரித்துள்ளார். இதனால், தங்களின் தகாத உறவுக்கு கணவன் இடையூறாக இருப்பதை நினைத்து எரிச்சலடைந்த கீர்த்தனா, காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கணவனை கொல்ல நினைத்த அவர், உணவில் மாத்திரை கலந்ததை கணவன் கண்டுபிடித்தால் என்ன செய்வது என தொடர்ந்து யோசித்து வந்துள்ளார்.... இந்நிலையில், பாகற்காய் குழம்பு வைத்தால் துவர்ப்பு சுவையில் உணவில் மாத்திரை கலந்ததை கண்டுபிடிக்க இயலாது என கிரிமினலாக யோசித்த அவர், சம்பவத்தன்று பாகற்காய் குழம்பு வைத்து அதில் தூக்க மாத்திரைகளை கலந்துள்ளார். பணிமுடிந்து வீட்டிற்கு வந்த மோகன்ராஜ், வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவில் தூக்க மாத்திரைகள் கலந்த பாகற்காய் குழம்பினை ஊற்றி சாப்பிட்ட நிலையில், தூங்க சென்றுள்ளார்...உணவில் கலந்த தூக்க மாத்திரையால் மோகன்ராஜ் நன்கு உறங்கி கொண்டிருப்பதை கண்ட அவரின் மனைவி, காதலன் கதிரேசனை போன் போட்டு அழைத்துள்ளார்...அழைப்புக்காக காத்திருந்த கதிரேசன் வீட்டிற்கு விரைந்த நிலையில், காதலனுடன் சேர்ந்து வீட்டின் அருகே இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் கொக்கி போட்டு பிவிசி பைப் மூலமாக மின்சாரத்தை கடத்திய கீர்த்தனா, கணவனின் மீது பாய்ச்சி அவரை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்... இதில், கணவன் துடிதுடித்து தப்பிய நிலையில், அவரை காதலனுடன் சேர்ந்து தலையனையால் அழுத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இதனையடுத்து, கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஊரை கூட்டி ஒப்பாரி வைத்து நாடகமாடிய அவர், உறவினர்களை அழைத்து கணவருக்கு இறுதி சடங்கை நடத்தியுள்ளார்...இதில், சந்தேகமடைந்த மோகன்ராஜின் சகோதரி, தனது சகோதரனின் இறப்பில் சந்தேகமிருப்பதாக போலீசில் புகாரளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோகன்ராஜை உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மோகன்ராஜின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்