இலங்கையில் ஒரு மனைவி - கோவையில் ஒரு மனைவி..இலங்கையில் இருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு

x

இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது பாரிஸ். இவருக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தமிழகம் வந்துள்ளார். இதில், முறையான ஆவணங்கள் ஏதுமின்றி தமிழகம் வந்த முகமது பாரிஸை போலீசார் சிறையில் அடைத்தனர். இதன்பின் ஜாமினில் வெளியே வந்த முகமது பாரிஸ், கோயமுத்தூரை சேர்ந்த ரெஸ்மில்லா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் சட்டவிரோதமாக அடிக்கடி இலங்கை சென்று வந்த முகமது பாரிஸ் இரண்டு மனைவிகளையும் கவனித்து வந்துள்ளார். இதனிடையே, இரண்டு மனைவிகளுடனும் சேர்ந்து ஒன்றாக வாழ திட்ட மிட்ட முகமது பாரிஸ், ரெஸ்மில்லாவை முறையாக பாஸ்போர்ட் எடுத்து இலங்கை அனுப்பி வைத்திருக்கிறார். இதையடுத்து, சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற முகமது பாரிஸை ராமேஸ்வரத்தில் வைத்து கீயூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முகமது பாரிஸ் பல திருட்டு வழக்குகளில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவர,அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்