சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி.. கணவன் போட்ட அப்பட்டமான நாடகம்

x

ஆலங்குடி அருகே மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கடுக்கக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பர்னாந்து - ஆரோக்கியமேரி தம்பதி.

கடந்த ஜூன் 25-ம் தேதி ஆரோக்கியமேரி சமயலறையில் தூக்கில் தொங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டார்,.

இதுகுறித்து வடகாடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில் பர்னாந்து - ஆரோக்கியமேரி தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பர்னாந்து, மனைவி ஆரோக்கியமேரியை கொன்று அதை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பர்னாந்துவை கைது செய்த போலீசார், ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்