கணவரிடம் தன் நகைகளை கொடுத்த உடனே உயிரை விட்ட மனைவி - நடந்தது என்ன-களத்தில் இறங்கிய போலீஸ்..!

x

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கூழாங்கல்சேரி காவல்கழனி பகுதியை சேர்ந்த சுரேஷ் - மோகனாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் 3 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு, கடந்த பிப்ரவரியில் வீடு திரும்பியுள்ளார்.

மனைவி மோகனாவிடம் திருமணத்திற்காக போடப்பட்ட 25 சவரன் நகைகளை சுரேஷ் கேட்டுள்ளார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த நகைகளை சகோதரர் மூலம் கொண்டு வரச்சொல்லி சுரேஷிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் ஒரு மணி நேரத்தில், மோகனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மோகனாவின் பெற்றோரிடம் சுரேஷ் கூறியுள்ளார். தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, மணிமங்கலம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்