தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு அலைந்த விதவைப்பெண் - தந்தி டி.வி. செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியர்

x

செய்யாறு அருகே இளநீர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்ற விதவைப்பெண், தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு, செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் மனு அளித்தார். இந்த மனுவை கண்டுகொள்ளாமல், வருவாய்த் துறையினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 11 மாதங்களாக திலகவதி அலைந்த நிலையில், தனது தாலியை லஞ்சமாக கொடுக்கச் சென்றார். அதனை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். அந்த வீடியோ காட்சி, தந்தி டி.வி. செய்தியில் அண்மையில் ஒளிபரப்பானது. இதன் தொடர்ச்சியாக, செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா விசாரணை நடத்தி, 11 மாதமாக இறப்புச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்காத துணை வட்டாட்சியர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். திலகவதிக்கு அவரது தந்தையின் இறப்பு சான்றிதழையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்