சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை - மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, பிராட்வே ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. ஏற்கனவே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரத்தில் வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதியுற்றனர். கடந்த 2 தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்வதால், மழைநீர் வடிகால், மின்கம்பி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com