அமமுகவில் இருந்து வெளியேறியது ஏன்? - "நாங்கள் பலியாக விரும்பவில்லை" -பாலசுந்தரம் பகீர் குற்றச்சாட்டு

x

டிடிவி தினகரனின் கொள்கையில் உடன்பாடு இல்லாததால், அமமுகவில் இருந்து வெளியேறி விட்டதாக பாலசுந்தரம் தெரிவித்துள்ளார். அமமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த பாலசுந்தரம், கிழக்கு மாவட்டச் செயலாளர் அய்யனார் ஆகியோர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனின் கொள்கையில் உடன்பாடு இல்லாததால், அமமுகவில் இருந்து விலகியதாகவும், சசிகலா-தினகரன் இடையே உள்ள பிரச்சனைக்கு நாங்கள் பலியாக விரும்பவில்லை எனவும் பாலசுந்தரம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்