யானையை முதலில் கட்டுவது யார்..? கொலையில் முடிந்த தகராறு... மூணாறு அருகே அதிர்ச்சி சம்பவம்...

x

கேரளாவில் யானை சவாரி மையத்தில் 2 பாகன்களுக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான யானை சவாரி மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் பாகன்களாக பணிபுரிந்து வரும் விமல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்குமிடையே யானையை கட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை தாக்கியுள்ளார்.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மணிகண்டனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்