உம்மன் சாண்டி தொகுதியில் அடுத்த வேட்பாளர் யார்?

x

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்த சில தினங்களே ஆன நிலையில், அவரது தொகுதியின் அடுத்த வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளாவில் இரண்டு முறை முதல்வராக இருந்தவரும், கோட்டையம் மாவட்டத்திற்கு உட்பட்ட புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தார். முதல்வர் முதல் சாதாரண கூலித் தொழிலாளர் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு பின்னர், அவருடைய உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் வகித்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை பிடிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. உம்மன் சாண்டியின் மகன், மகள் என பலரின் பெயர்கள், பல்வேறு தரப்பினரால் பேசப்படுகிறது. இந்நிலையில், வேட்பாளர் குறித்து உம்மன் சாசாண்டியின் குடும்பத்தினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்